Saturday, August 31, 2019

மனம் திறத்தல்

மனம் திறந்து பேசுதல் என்பது ஒரு தனி விடயமாகும். இதில் சிறியோர் பெரியோர் ஆண்கள் பெண்கள் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி வெள்ளையன் கருப்பன் போன்ற எந்த பாகுபாடுகளும் பார்க்க தேவையில்லை மாறாக உண்மையை உண்மையாகச் சொன்னால் போதுமானதாகும். சிலவேளை நீங்கள் மனம் திறந்து பேசும் போது எதிரில் உள்ளவர் வெட்கித் தலை குனிந்தாலும் எப்பொழுதும் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மனம் திறந்து பேசும் நீங்கள் எதற்கும் கவலைப்பட தேவையில்லை அது அவசியமும் அன்று. இதில் மிகவும் முக்கியமான கருத்து என்னவென்றால் ஒருவர் இன்னொருவருடைய தவறுகளை அவதானித்து அதற்கு தகுந்தாற்போல் நல்ல அறிவுரைகளையும் புத்திமதிகளையும் சொல்வதை எதிரே உள்ள அந்த நபர் காது தாழ்த்தி கேட்க வேண்டும் மாறாக புத்தி சொல்பவர் கதைத்துக் கொண்டிருக்கும் போது அதற்கு மேலாக குரலை உயர்த்தி பேசுவது நாகரீகத்திலும் அனாகரிகம் ஆகும். ஒருபோதும் மற்றவரை புண்படுத்தும் வகையில் உங்களுடைய எந்த நடவடிக்கைகளையும் ஒரு போதும் வைத்துக் கொள்ளாதீர்கள் ஏனென்றால் அது உங்களுக்கு உரிய தனி பாணியை மாற்றிவிடும்.
நன்றியுடன் ஆர்கே