Saturday, September 14, 2019

நயவஞ்சகத் தனமும் மன்னிப்பும்

நயவஞ்சகத்தனம் என்பது உலகிலுள்ள மிக மோசமான பழக்கங்களில் ஒன்றாகும். மனதில் ஒரு பேச்சும் நாவில் ஒரு பேச்சும் இருப்பது நயவஞ்சகத்தனத்தின் பிரதான அறிகுறியாகும். யாரிடம் இந்த நயவஞ்சகத்தனம் வருகின்றதோ அந்த நபரை மிகவும் அவதானமாக கையாளவேண்டும் ஏனெனில் அந்த நபரின் மூலமாகவே உங்களது வாழ்க்கை அறுதியாகலாம். இந்த நயவஞ்சக தனத்தின் மூலம் இவ்வுலகில் பெரிதாக சாதிக்கக் கூடியது எதுவும் இல்லை மாறாக பல்வேறுபட்ட கருத்துக்களும் சமூக எதிர்மறையான கருத்துக்களும் அதிகமாகும். பொதுவாக இந்த நயவஞ்சகத்தனம் பெற்றோரில் இருந்து கடத்தப்படுவதாக என்று நான் நினைக்கின்றேன். பார்த்தி சரியாக இருந்தால் எப்போதும் அதன் விளைவுகள் சரியாகத்தான் இருக்கும்.