Wednesday, October 16, 2019

குறுக்குத் தெரு சம்பவம் 4

பணம் மற்றும் இதர தேவைப்பாடுகளை தேடுவதற்கு முன் மற்றவர்களுக்கு நாங்கள் எப்படி இடைஞ்சல் இல்லாமல் வாழவேண்டும் என்பதை நாம் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். சில வெறிபிடித்த அசிங்கங்கள் இன்னும் கூறப்போனால் அடி முட்டாள்கள் தன்னை அறிவாளிகள் என்று நம்பியிருக்கும் போலிகள் நடந்துகொள்ளும் விதங்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. ஆகக்குறைந்தது முட்டாள்களுக்கு தனது மோட்டார் சைக்கிளை எவ்வாறு தனது வீட்டின் முன் நிறுத்துவது என்பது கூட தெரியாமல் உள்ளனர். நிச்சயமாக அது உங்களுடைய வீட்டுக்கு போடப்பட்ட பாதை என்றால் நீங்கள் எதுவும் செய்யலாம் ஆனால் பொதுவான ஒரு பாதையில் வாகனங்களை எவ்வாறு நிறுத்துவது என்பது கட்டாயமாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முன் ஒரு மோட்டார் சைக்கிளை அல்லது ஒரு மோட்டார் காரை சம்பந்தப்பட்ட நபர் எவ்வாறு ஒரு குறுக்கு தெருவில் நிறுத்துகிறார் என்பதை அவதானித்து சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டும். இதில் வேடிக்கையும் விநோதமும் என்னவென்றால் இந்த அடிமட்ட முட்டாள்களே மற்ற முட்டாள்கள் இவர்கள் நிறுத்துவது போல் அவர்களும் நிறுத்தினால் ஒரு பூகம்பம் வரும் அளவிற்கு சண்டைக்கு வருகின்றனர். உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி உங்களுக்கு வந்தா ரத்தம் 

Regards . . .

மனிதநேயம்

மனிதனாக படைக்கப்பட்டவன் நிச்சயமாக இறைவனின் அதி உயர் மற்றும் விசித்திரம் நிறைந்த ஒரு படைப்பாக பார்க்கப்படுகிறான். இந்த மனித படைப்பானது பல்வேறுபட்ட அம்சங்களை கொண்டு சிறப்பாக படைக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் விசித்திரமான ஒரு அங்கமாக மனிதனின் மனதை எடுத்துக் கொள்ளலாம். இந்த மனது பலவகையான எண்ணங்களின் பெட்டகமாக இருக்கின்றது. எது எவ்வாறு இருந்தபோதிலும் சிலருக்கு நல்ல எண்ணங்களும் சிலருக்கு கெட்ட எண்ணங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் நல்லெண்ணம் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்கள் மிகவும் நல்லவர்களாகவும் அதிகம் உதவி செய்பவர்களாகவும் மேலும் அளவுகடந்த இறைபக்தர்கள் ஆகவும் இருப்பார்கள். இதே போல் கெட்ட எண்ணங்கள் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்கள் மனிதர்களில் மிகவும் கெட்டவர்களாகவும் பொறாமை மற்றும் எரிச்சல் போன்ற பல கெட்ட நடத்தை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவ்வாறான மனிதர்களிடம் நாம் மிகவும் அவதானமாகவும் இறைவனிடம் பாதுகாவல் தேடுபவர்கள் ஆகவும் ஆகவும் இருக்க வேண்டும். எது எவ்வாறாயினும் நாம் இந்த உலகுக்கு வந்து ஏறத்தாழ சுமார் 60 அல்லது 70 வருடங்கள் மட்டுமே வாழ்பவர்களாக இருக்கின்றோம். இதற்குள் நாம் மனிதநேயத்தை எங்களிடத்தில் வளர்த்து நல்ல மனிதர்களாகவே மரணிக்க முயல வேண்டும். #ஆர்கே