Wednesday, October 16, 2019

குறுக்குத் தெரு சம்பவம் 4

பணம் மற்றும் இதர தேவைப்பாடுகளை தேடுவதற்கு முன் மற்றவர்களுக்கு நாங்கள் எப்படி இடைஞ்சல் இல்லாமல் வாழவேண்டும் என்பதை நாம் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். சில வெறிபிடித்த அசிங்கங்கள் இன்னும் கூறப்போனால் அடி முட்டாள்கள் தன்னை அறிவாளிகள் என்று நம்பியிருக்கும் போலிகள் நடந்துகொள்ளும் விதங்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. ஆகக்குறைந்தது முட்டாள்களுக்கு தனது மோட்டார் சைக்கிளை எவ்வாறு தனது வீட்டின் முன் நிறுத்துவது என்பது கூட தெரியாமல் உள்ளனர். நிச்சயமாக அது உங்களுடைய வீட்டுக்கு போடப்பட்ட பாதை என்றால் நீங்கள் எதுவும் செய்யலாம் ஆனால் பொதுவான ஒரு பாதையில் வாகனங்களை எவ்வாறு நிறுத்துவது என்பது கட்டாயமாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முன் ஒரு மோட்டார் சைக்கிளை அல்லது ஒரு மோட்டார் காரை சம்பந்தப்பட்ட நபர் எவ்வாறு ஒரு குறுக்கு தெருவில் நிறுத்துகிறார் என்பதை அவதானித்து சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டும். இதில் வேடிக்கையும் விநோதமும் என்னவென்றால் இந்த அடிமட்ட முட்டாள்களே மற்ற முட்டாள்கள் இவர்கள் நிறுத்துவது போல் அவர்களும் நிறுத்தினால் ஒரு பூகம்பம் வரும் அளவிற்கு சண்டைக்கு வருகின்றனர். உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி உங்களுக்கு வந்தா ரத்தம் 

Regards . . .

No comments: