Saturday, July 6, 2019

குறுக்குத்தெரு சம்பவம்-3

உள்ளூர் தெருக்களில் சில முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் வாகனத்தை ஓட்டும் விதம் ஒரு வகையான பீதியை கிளப்புகின்றன. அவர்களுடைய முச்சக்கரவண்டி எந்த வேகத்தில் செல்கின்றது என்று சில வேளை அவர்களுக்கே தெரியாமல் கூட இருக்கலாம் ஏனெனில் அவ் வேகமானது ராக்கெட்டின் வேகத்தைவிட மிஞ்சி விடும் போல் உள்ளது. முன்னால் வரும் வாகனங்கள் முந்த படும் வாகனங்கள் பின்னால் வரும் வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் பாதசாரிகள் என்ற எந்த வேற்றுமையும் இல்லாமல் எந்த அனுசரிப்பும் இல்லாமல் தனக்கு மட்டுமே போடப்பட்ட வீதியை போல் இவர்களின் அட்டகாசம் தலைக்குமேல் ஏறி உள்ளது. அதிலும் குறிப்பாக சில வயதுக்கு வராத ஓட்டுனர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே அதற்கு ஒப்பானவர்கள் இவர்களை தவிர யாரும் இல்லை. இன்னும் சில ஓட்டுனர்கள் தன்னை ஒரு ஹாலிவுட் கதாநாயகர்கள் என்று எண்ணிக் கொண்டோம் முச்சக்கரவண்டியை இறுதி சக்கரங்களிலும் தனி ஒரு சக்கரத்திலும் மற்றும் தலைகீழாகவும் ஒட்டி அசத்துகிறார்கள். தயவு செய்து உங்களது அசத்தல் களை ஊருக்கு வெளியில் உள்ள தோட்டத்திலோ அல்லது வயல்வெளிகளிலும் முயற்சி செய்யுங்கள் ஏனெனில் வீதியில் பாடசாலை மாணவர்களும் சிறுவர்களும் மற்றும் முதியவர்களும் பாதசாரிகள் ஆக இருக்கின்றார்கள்.

No comments: