Wednesday, July 3, 2019

தொழில் செய்யும் இடம்

நீண்ட நாட்களின் பின் என்னோடு வேலை செய்யும் ஒரு நண்பரை சந்தித்தேன். நிறையவே அளாவிளாவினோம். குடும்பம், அரசியல், வேடிக்கை, வினோதம், சமகால பிரச்சனைகள், உலககிண்ண கிரிக்கட் மற்றும் தொழில் இடங்கள் போன்றன இவற்றில் அடங்கும். அவர் தான் வேலை செய்யும் இடத்தைப்பற்றி ஒரு கதை சொன்னார். அவர் இவ்வாறு ஆரம்பித்தார். "அது ஒரு அடர்ந்த காடு. இக்காட்டின் நுழைவாயிலின் ஊடாக சுமார் காலை 8 மணி அளவில் உட்சென்று மாலை 5 மணிக்குள் வெளியாக வேண்டும். சுமார் 8 மணி தொடக்கம் 9 மணி பயணத்தில் இக்காட்டினுள் மிகப் பயங்கரமான கொடூரமான மிருகங்களை சந்திக்க நேரிடும். இதுபோக மிகக் கொடிய விஷமுள்ள பாம்புகளும் உள்ளன. வழியில் பல விதமான ஆறுகளையும் கால்வாய்களையும் மலைகளையும் பெரிய ஆபத்துக்களையும் கடக்க வேண்டும். இவ்வளவும் கடந்து மாலை 5 மணிக்குள் காட்டின் மறுபக்கத்தின் வழியாக எவர் ஒருவர் வருகின்றாரோ அவரே அந்நாளில் வெற்றி பெற்றவர் ஆவார்". இவ்வாறு தனது வேலை செய்யும் இடத்தை பற்றி மிகவும் சுவைபட நண்பர் கூறினார். 樂樂樂

No comments: