Sunday, April 19, 2020

அல் குர்ஆ்னின் ஈர்ப்பு

ஒருநாள் ஓய்வு நேரம். என்னிடம் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்தாகி விட்டது, புதிதாக படிப்பதற்கு ஒன்றுமில்லை. அப்போது, மேசையில் இருந்த குரான் கண்ணில் பட்டது.

வீட்டில் போரடிக்கும் போது, ஒரு வார இதழை எடுத்து நாலு பக்கங்களை புரட்டி பின்னர் வைத்துவிடுவோமே, அதுபோல நினைத்துதான் குரானைத் திறந்தேன்.

குர்ஆனில் குறை கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் இல்லை, அவ்வளவுதான். இது மற்றுமொரு புத்தகம், அவ்வளவே...

முதல் அத்தியாயத்தை பார்த்தேன், அல் பாத்திஹா என்றிருந்தது. அதில் ஏழு வசனங்கள். நல்ல அழகான, கோர்வையான வசனங்கள். முஸ்லிம்கள் குரானை இறைவேதமென்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை அது மனிதரால் எழுதப்பட்டது. அதனால், இந்த புத்தகத்தை எழுதியவர் நல்ல இலக்கியவாதி என்று பாராட்டினேன். நல்ல புத்திசாலி என்றும் நினைத்தேன், படிப்பவர்களை துவக்கத்திலேயே நன்றாக கட்டிப்போடுகிறாரே...

அதில் ஒரு வசனம்,

தீர்ப்பு நாளின் அதிபதி --- Qur'an 1:3

என்ன தீர்ப்பு நாளா?, இவரே மக்களுக்கு கஷ்டத்தை கொடுப்பாராம், இவரே தீர்ப்பு சொல்லுவாராம் என்று கோபப்பட்டேன்...

முதல் சூரா என்னை மேற்கொண்டு படிக்க தூண்டியது. அடுத்த அத்தியாயம், சூரத்துல் பகரா...

அதன் இரண்டாது வசனம்,

இது திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டியாகும். --- Qur'an 2:2

என்ன ஒரு அதிகார தோரணை என்று வியந்தேன். நிச்சயமாக இந்த புத்தகத்தை எழுதியவர் அறிவாளிதான். அதுமட்டுமல்லாமல் ஒரு அறிவுசார்ந்த விவாதத்திற்கு தயார்படுத்தின அந்த வசனங்கள்.

படித்துக்கொண்டே வந்தேன். அந்த சூராவின் முப்பதாவது (30) வசனம் ஒரு கனம் என்னை திக்குமுக்காட செய்தது. ஏனென்றால் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கேள்வி அங்கு கேட்கப்பட்டிருந்தது.

ஏன் கடவுள் அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? என்ற கேள்விதான் அது...

என்னுடைய கேள்வியை இங்கே வானவர்கள் கேட்கின்றனர்.

இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னை துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள். --- Qur'an 2:30

இந்த ஒரு வசனம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நான் நாத்திகனாக மாறியதில் இந்த ஒரு கேள்விக்கு நிச்சயம் முக்கிய பங்குண்டு.

வானவர்கள் கேட்பது நியாயம்தானே?. அவர்களோ தவறு செய்யாதவர்கள், இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களையே பூமியில் வாழ வைத்திருக்கலாமே? ஏன் இந்த அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? வானவர்களின் கேள்வி மிக நியாயமானது...இதற்கு என்ன பதில் என்று ஆர்வமுடன் மேற்கொண்டு படித்தேன்.

அதே வசனத்தின் இறுதியில்,

அவன் " நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான் --- Qur'an 2:30.

என்ன நீ அறிவாயா? ஏன் பாவம் செய்யக்கூடிய மனிதர்களை படைத்தாய் என்று கேட்டால், அதற்கு அனைத்தையும் நீ அறிவாய் என்பதுதான் பதிலா?

இப்போது குரானுடன் நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் (சிரிக்கிறார்), இந்த குரானை முழுமையாக படித்து என் மற்ற கேள்விகளுக்கும் என்ன பதிலளிக்கிறது என்று பார்த்து விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.

நாலு பக்கங்கள் மட்டுமே திருப்பலாம் என்றிருந்தவனை இந்த குரான் மென்மேலும் படிக்க தூண்டிக்கொண்டே இருந்தது, என்னுடைய கேள்விகள் ஒவ்வொன்றாய் பதிலளிக்கப்பட்டு கொண்டே வந்தன.

என் அனுபவங்களை முழுமையாக சொல்ல இந்த நேர்க்காணல் நேரம் போதாது. ஆனால் நான் சொல்ல விரும்புவதெல்லாம், குரானை முழுமையாக படித்த பிறகு, தனிப்பட்டமுறையில் என் கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தன.

குரானின் வசனங்கள் ஆணித்தரமானவை, ஆழ்ந்த கருத்துக்களை கொண்டவை.

பிறகு, என் இருபத்தி எட்டாவது வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்.டாக்டர் ஜெப்ரி லேங் (Dr.Jeffrey Lang), அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைகழகத்தில் (University of Kansas) கணிதத்துறை பேராசிரியராய் இருப்பவர். 1980 களின் முற்பகுதியில், தன் 28 ஆவது வயதில் இஸ்லாத்தை தழுவியவர். தன் பதினாறு வயதிலிருந்து இஸ்லாத்தை ஏற்கும்வரை நாத்திகராக இருந்தவர்.

Tuesday, January 21, 2020

Halal certificate

13.01.2020 இன்று முதல் 3 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஹலால் சான்றிதழ் இரத்து செய்யப்பட்டுள்ளது.

⭐ 1. Uswatte Confectionery Works (Pvt) Ltd.

இந்நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க HAC இனால் வழங்கப்பட்ட ஹலால் சான்றிதழ் இரத்து செய்யப்பட்டுள்ளது.
▪ Uswatta நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்கள்
💳 1. Tip Tip
💳 2. Wafers
💳 3. Glucorasa Jujubes)
💳 4. Party (Artificial Drink Powder)
💳 5. PapperMint
💳 6. Fruit Jelly
💳 7. GlucoLife
💳 8. Fruit Candy
💳 9. Jumbo Peanuts
➖➖➖➖➖➖➖➖
⭐ 2. Ranash Company (Pvt) Ltd.
▪ RANASH நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்கள்
💳 1. Instant Mix
💳 2. Masala Mix 
💳 3. Spice Mix (மிளகாய் தூள் தயாரிப்புகள்)
➖➖➖➖➖➖➖➖
⭐ 3. Jay Foods Lanka (Pvt) Ltd.
▪ Jay Foods நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்கள்
💳 1. Fruit Juice
💳 2. Vegetables Juice
💳 3. Sea Foods
➖➖➖➖➖➖➖➖
HAC ஹலால் சான்றிதழ் நிபந்தனைகளுக்கு உடன்படாத காரணத்தால் இவ் இரு நிறுவனங்களிற்கு இ HAC இன் ஹலால் சான்றிதழ் இரத்து செய்யப்பட்டுள்ளது.

⭕ அத்துடன் இவ்நிறுவனங்களின் தயாரிப்புகள் HAC இன் கண்காணிப்பு முறைமைகளிலிருந்து உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு:
📞 0117425225

Wednesday, January 15, 2020

திருமணம்

حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاٰخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَاۤٮِٕلُ اَبْنَآٮِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ‌ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۙ‏
உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:23)

Wednesday, December 25, 2019

DARBAR (Tamil) - Chumma Kizhi (Lyric Video) | Rajinikanth | A.R. Murugadoss | Anirudh | Subaskaran

Presenting the Official Lyric Video of 'Chumma Kizhi' from 'DARBAR (Tamil)'; Starring Rajinikanth & Nayanthara in lead roles, Music Composed by Anirudh Ravichander, Produced by Lyca Productions & Directed by AR Murugadoss.


15 Amazing Shortcuts

It is important to know the shortcuts when you are using computers since it save your time and add extra smart to you among others. Let's enjoy it.



Wednesday, October 16, 2019

குறுக்குத் தெரு சம்பவம் 4

பணம் மற்றும் இதர தேவைப்பாடுகளை தேடுவதற்கு முன் மற்றவர்களுக்கு நாங்கள் எப்படி இடைஞ்சல் இல்லாமல் வாழவேண்டும் என்பதை நாம் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். சில வெறிபிடித்த அசிங்கங்கள் இன்னும் கூறப்போனால் அடி முட்டாள்கள் தன்னை அறிவாளிகள் என்று நம்பியிருக்கும் போலிகள் நடந்துகொள்ளும் விதங்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. ஆகக்குறைந்தது முட்டாள்களுக்கு தனது மோட்டார் சைக்கிளை எவ்வாறு தனது வீட்டின் முன் நிறுத்துவது என்பது கூட தெரியாமல் உள்ளனர். நிச்சயமாக அது உங்களுடைய வீட்டுக்கு போடப்பட்ட பாதை என்றால் நீங்கள் எதுவும் செய்யலாம் ஆனால் பொதுவான ஒரு பாதையில் வாகனங்களை எவ்வாறு நிறுத்துவது என்பது கட்டாயமாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முன் ஒரு மோட்டார் சைக்கிளை அல்லது ஒரு மோட்டார் காரை சம்பந்தப்பட்ட நபர் எவ்வாறு ஒரு குறுக்கு தெருவில் நிறுத்துகிறார் என்பதை அவதானித்து சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டும். இதில் வேடிக்கையும் விநோதமும் என்னவென்றால் இந்த அடிமட்ட முட்டாள்களே மற்ற முட்டாள்கள் இவர்கள் நிறுத்துவது போல் அவர்களும் நிறுத்தினால் ஒரு பூகம்பம் வரும் அளவிற்கு சண்டைக்கு வருகின்றனர். உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி உங்களுக்கு வந்தா ரத்தம் 

Regards . . .

மனிதநேயம்

மனிதனாக படைக்கப்பட்டவன் நிச்சயமாக இறைவனின் அதி உயர் மற்றும் விசித்திரம் நிறைந்த ஒரு படைப்பாக பார்க்கப்படுகிறான். இந்த மனித படைப்பானது பல்வேறுபட்ட அம்சங்களை கொண்டு சிறப்பாக படைக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் விசித்திரமான ஒரு அங்கமாக மனிதனின் மனதை எடுத்துக் கொள்ளலாம். இந்த மனது பலவகையான எண்ணங்களின் பெட்டகமாக இருக்கின்றது. எது எவ்வாறு இருந்தபோதிலும் சிலருக்கு நல்ல எண்ணங்களும் சிலருக்கு கெட்ட எண்ணங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் நல்லெண்ணம் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்கள் மிகவும் நல்லவர்களாகவும் அதிகம் உதவி செய்பவர்களாகவும் மேலும் அளவுகடந்த இறைபக்தர்கள் ஆகவும் இருப்பார்கள். இதே போல் கெட்ட எண்ணங்கள் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்கள் மனிதர்களில் மிகவும் கெட்டவர்களாகவும் பொறாமை மற்றும் எரிச்சல் போன்ற பல கெட்ட நடத்தை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவ்வாறான மனிதர்களிடம் நாம் மிகவும் அவதானமாகவும் இறைவனிடம் பாதுகாவல் தேடுபவர்கள் ஆகவும் ஆகவும் இருக்க வேண்டும். எது எவ்வாறாயினும் நாம் இந்த உலகுக்கு வந்து ஏறத்தாழ சுமார் 60 அல்லது 70 வருடங்கள் மட்டுமே வாழ்பவர்களாக இருக்கின்றோம். இதற்குள் நாம் மனிதநேயத்தை எங்களிடத்தில் வளர்த்து நல்ல மனிதர்களாகவே மரணிக்க முயல வேண்டும். #ஆர்கே